HomePoetryStoriesLyrics & SongsTamil PoemsContact us


சேவல்
குட்டையான அலகினோடும்
    குருத்துப் போன்ற கொண்டையோடும்
பட்டுச் சொக்காய் இறகினோடும்
    பரிதி வண்ணச் சிலிர்ப்பி னோடும்
கட்டழகு வால்விசிறி
    கருது போலக் காற்றிலாடப்
பெட்டகமாய் இரு சிறகைப்
    பைக்குள்ளே சொருகிக் கொண்டு
நட்டமான கூரை மீது
    நடனமாடிக் காட்டி விட்டுப்
"பட்"டெனச் சிறகடித்துப்
    பகட்டாகக் கழுத்தை நீட்டி
அட்டகாச மாகக் கூவி
    அனைவரையும் எழுப்பி வைத்துப்
பெட்டைக் கோழி பின்னே சுற்றும்
    பெருமை மிக்க சேவலைப் பார்!
      
      (12 வயதில் எழுதியது)


 

             Copyright © www.ravianbil.com   l   Home   l   Email